Screen Reader Access     A-AA+
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி - 624601, திண்டுக்கல் .
Arulmigu Dhandayuthapaniswamy Temple, Palani - 624601, Dindigul District [TM032203]
×
Temple History

தல வரலாறு

பழனி மலையும், இடும்பன் மலையும் சிவகிரி, சத்திகிரி என கயிலாயத்திலிருந்ததாகவும் சிவபெருமான் அவைகளை அகத்திய முனிவருக்குக் கொடுக்க அவைகளைப் பொதிகைக்குக் கொண்டுப்போக நினைத்து அவர் இடும்பாசூரனுக்கு ஆணையிட, அவைகளைக் கொண்டுபோகும் வழியில் களைப்படைந்து இப்போதிருக்கும் இடத்தில் இடும்பன் இறக்கிவைக்க அங்கு முருகன் கருணையினால் இவ்விடமே பொருந்தியதென்றும், இடும்பன் அதன் காரணம் நோக்கும் போது சிவகிரியின் மீது முருகன்கனிவாய்ச் சிறுவனாகக்குராமரத்தின் கீழ் தோன்றவும், அசுரனுக்கும், இளஞ்சேய்க்கும் போர் நிகழவும், அசுரன் உயிர்நீப்ப இடும்பியின் முறையீட்டால் உயிர் மீண்டும் பெறவும் அவன் பெற்ற இருவரத்தால் ஆண்டவன் மலையில் இடும்பன் சன்னதி என்ற இடத்தில் வாயில் காவலனாக ஒரு இடம் பெற்றுத்தான் இருமலைகளையும் எடுத்துவந்தது போன்று காவடியுடன் தமது பிரார்த்தனைகளைக் கொண்டு வரும் அடியார்கள் முருகன் அருள்...

தல பெருமை

திருக்கோயில்தலவரலாறுவிவரம் : சங்ககாலத்தில் இவ்வூரின் பெயர் பொதினி என்பதாகும். பொதினி என்பது மருவி பழனி ஆயிற்று. வையாவிநாடு என்றும் ஆவிநாடு என்றும் இப்பகுதி சங்க இலக்கியங்களில் குறிக்கப்படுகிறது. முருகனை வியந்துபாடும் திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிக்கும் ஆவினன்குடியே தற்காலப் பழனி நகரமாகும். ஆகும். அம்மை வள்ளியோடு காட்சியளித்ததாக நக்கீரர் குறிப்பிடுகின்றார். மலைமீது அமைந்துள்ள முருகன் கோயில் குறித்து திருமுருகாற்றுப்படையில் குறிக்கப்படவில்லை. நக்கீரருக்குப் பிறகு பதினென்சித்தரான போகரால் உருவாக்கப்பட்ட கோயிலே பாலதண்டாயுதபாணி எனப்படும் பழனியாண்டவர் மலைக்கோயிலாகும். வையாவிக்கோமான் எனப்படும் கடைஎழுவள்ளல்களில் ஒருவராகக் கருதப்படும் பேகன் வாழ்ந்த ஊர் இதுவாகும். வையாவிநாட்டின் தலைநகரமாக பொதினி விளங்கியது. மயிலுக்குப் போர்வையத்தந்தவன் என இவர் புகழப்பெறுகின்றார். இவர் பிறந்த குடிஆவியர்குடி (ஆவினன்குடி) எனப்படும். எனவே அவர்பிறந்து ஊர் ஆவியர்...

இலக்கிய பின்புலம்

திருமலையின்சிறப்பு : திருவருள்ததும் பியதுதமிழகம், சேரனும், பாண்டியனும் ஒருங்கு போற்றிய கொங்கு வைகாவூர் நாட்டுப்பழம் பதியாகிய பழனி காலவரையறைக்கு உட்படாத பழமையும், பெருமையும் உடையது. தமிழ் இலக்கியங்களில் சித்தன்வாழ்வு எனச்சிறப்பிக்கப் பெற்றது. மலைமேல்மருந்தாகிய ஞானதண்டாயுதபாணியின் அருள் திருமேனியை நிர்மாணித்தகாலம் காலவரையறையில் அகப்பட்டதன்று. அத்திருமேனியைத் தரிசித்த பேறானது மக்களின் பிறவிப் பிணியை அகற்றி உலகப்பெரும் பேற்றில் இன்றும் என்றும் ஈடுபடுத்துவது ஆகும்.

புராண பின்புலம்

விஜயநகரப்பேரரசு : விஜய நகரப்பேரரசின் அரசர்களான மல்லிகார்ஜுனர் மற்றும் கிருஷ்ண தேவராயரின் கல்வெட்டுகள் இக்கோயிலில் உள்ளன. மல்லிகார்ஜுனராயர் காலத்தில் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்வதற்கும் மூன்று சந்திகளும் மஹாபூஜையாக விளங்க வேண்டும் என்பதற்காக நிவந்தங்கள் அளிக்கப்படுகின்றன. சுவாமியின் திருமுன்பு அமுதுபடைக்கவும் திருநந்தாவிளக்கு எரிக்கவும் திருமாலை திருமஞ்சனம் செய்யவும் இதன் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதற்கு அளிக்கப்பட்ட நிலமானது இரவிமங்கலம் ஊருக்கு மேற்கிலும் கொழுமத்திற்கு போகும் சாலைக்கு தெற்கிலும் பன்றிமலைச் சாலைக்கு தெகிலும்அமைந்திருந்தது.